பெண் ஊழியர் இருப்பதை கவனிக்காமல் குப்பைகளை தவறுதலாக கொட்டிய லாரி ஓட்டுநர்.. மூச்சுத் திணறி பெண் ஊழியர் பலி..!

கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பை கிடங்கில், பெண் ஊழியர் பணியில் இருப்பதை கவனிக்காமல், டிப்பர் லாரியில் இருந்த குப்பைகளை ஊழியர்கள் அவர் மீது, கொட்டியதில் அப்பெண் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியில் 30 பேர் வழக்கம் போல் ஈடுபட்டுள்ளனர். அப்போது, குப்பைகளை ஏற்றி வந்த டிப்பர் லாரி ஓட்டுநர், லாரியின் பின்புறம் பெண் ஊழியர் சிவகாமி என்ற நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் குப்பைகளை அவர் மீது கொட்டியதாக கூறப்படுகிறது.

இதில் குப்பைகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிவகாமியின் அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் அவரை மீட்டனர். ஆனால் அதற்குள் மூச்சு திணறி சிவகாமி உயிரிழந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.