திருப்பதி வந்த ஏழுமலையான் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வார நாட்களில் நாள்தோறும் 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகளும் விநியோகித்து வருகின்றன.

கொரோனா காலத்துக்கு பிறகு திருமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால் கடந்த சனி, ஞாயிறு ,திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை( நாளை) என நான்கு நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் மொத்தமாக சனிக்கிழமையே விநியோகம் செய்யப்பட்டு, டிக்கெட் கவுன்ட்டர்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பல்வேறு மாநிலங்களிலிருந்து நடைபயணமாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை புரிந்திருந்தனர். இலவச தரிசன டிக்கெட் பெற முயன்ற அவர்கள், கவுன்டர்கள் மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தில் காங். பிரமுகருடன் ஸ்மிருதி இரானி சண்டை – வைரலாகும் வீடியோ!

செவ்வாய்க்கிழமை வரையிலான தரிசன டிக்கெட்டுகள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும், இனி புதன்கிழமைதான் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பதையும் அறிந்து அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தரிசன டிக்கெட்டுகள் கிடைக்காத விரக்தி அடைந்த பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில பக்தர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அலிபிரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பக்தர்கள் சமாதானம் அடைந்தனர்.

அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம், கோதண்ட ராமர் கோயில் சத்திரம் ஆகிய 3 இடங்களில் ஏழுமலையான் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.