இலவச தரிசன நடைமுறையில் மாற்றம்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சரிவர அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், மூன்றாம் அலை எல்லாம் அடங்கியதையடுத்து, மார்ச் மாதத்தில் இருந்து திருமலை திருப்பதியில் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இலவச தரிசனம்
, கட்டண தரிசனம் என நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில், கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்க குவிந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்கத்கிழமை (ஏப்.12) வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டு, கவுன்ட்டர்கள் மூடப்பட்டன. இதனால் வார இறுதியில் திருப்பதி்க்கு வந்த பக்தர்கள்
இலவச தரிசன டிக்கெட்
கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று கவுண்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. இதனை பெற ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்ததால் அவர்களுக்கு இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மூன்று பக்தர்கள் காயமடைந்தனர்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

திருமலையில் உள்ள வைகுண்ட காத்திருப்பு அறையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வைகுண்ட காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால், வெளியே பல மணிநேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இலவச தரிசன டிக்கெட் கவுன்ட்டரில் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை அடுத்து, இனிமேல் முன்பு இருந்தது போலவே டோக்கன் வழங்காமலேயே பக்தர்கள் இலவச தரிசனம் செல்லலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.