உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு – கல்லூரிகளில் சேர்க்கை – கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

சென்னை: உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் நாடு திரும்பிய மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அந்நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, உக்ரைனில் தங்கி உயர் கல்வி படித்துவந்த இந்திய மாணவர்கள், போர் அச்சத்தால் அங்கிருந்து நாடு திரும்பினர். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.