அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர்

அண்ணல் அம்பேதகரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர் இனி வரும் காலங்களில் ஏப்ரல் 14-ந் தேதி சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படுவதோடு, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்தார்.

மேலும், அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் எனவும், அம்பேத்கர் எழுதிய நூல்களை தேர்ந்தெடுத்து செம்பதிப்பாக மொழிபெயர்த்து தமிழில் வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.