பட்டவர்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு.!

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க இன்று முதல் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.