சாப்பிட்ட உணவிற்கு பணம் தர மறுப்பு.. பொருட்களை அடித்து உடைத்து ரவுடித்தனம் செய்த திருநங்கைகள்..

விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் திருநங்கைகள் ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

உணவகத்தில் சில திருநங்கைகள் சிக்கன் மட்டன் என பல வகையான உணவுகளை சாப்பிட்ட பின் பணம் தராமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், பணம் கேட்ட உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதோடு கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். .

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருத்தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.