கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது யானைக்கு மதம் பிடித்தது.. வாகனங்களை தள்ளிவிட்டு ஏறி மிதித்து ஓடிய யானையால் சிலருக்கு காயம்

கேரளாவில், கோயில் திருவிழாவின் போது ஊர்வலமாக வந்த யானை திடீரென மதம் பிடித்து ஓடிய காட்சி வெளியாகியுள்ளது.

பாலக்காட்டை அடுத்த மந்தம்பள்ளிபகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்காக நேற்று கொண்டுவரப்பட்ட இரு யானைகளில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்ததாக கூறப்படுகிறது.

அதில், அந்த யானை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும், பொதுமக்களையும் தள்ளிவிட்டு மீது ஏறி மிதித்து ஓடியுள்ளது. இதில் சிலர் காயமடைந்தனர்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்த நிலையில், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பாகான்கள் யானையை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.