இளைஞருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று… லாக்டவுன் அச்சத்தில் பொதுமக்கள்!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா மூன்றாவது அலை இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் சற்று நிம்மதியடைந்திருந்த பொதுமமக்களின் தூக்கத்தை கலைக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களில் தற்போது நான்காவது அலை மெல்ல மெல்ல பரவ தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த 21 லயது இளைஞருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு எந்தவகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் சமீபத்திய உருமாறிய கொரோனாவான எக்ஸ் இ வகை வைரஸ் தொற்று அந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாநிலத்தில்
எக்ஸ் இ வகை கொரோனா
பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
கொல்லம்
பகுதியில் வீடு,வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சீனாவில் கொரோனா முதல் அலை பரவ தொடங்கியது. அப்போது அங்கு மருத்துவம் படிக்க சென்ற கேரள மாணவிகள்,கொரோனா பரவ தொடங்கியதன் காரணமாக ஊர் திரும்பினர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த நபர்தான் இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளான நபராக கருதப்பட்டார்.

எக்ஸ் இ வகை கொரோனா தொற்று சீனாவில் பரவி வரும் நிலையில், கேரளாவிலும் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது நாடு கொரோனா நான்காவது அலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதாகவே உள்ளது. இதனால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் கேரள மாநில மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.