ஓ, அந்த சர்ச்சை பிரபலம் தான் சமந்தாவின் காதலரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,
நயன்தாரா
,
சமந்தா
உள்ளிட்டோர் நடித்திருக்கும்
காத்து வாக்குல ரெண்டு காதல்
படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

அந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் முகமது மொபி என்கிற கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தான் சமந்தாவின் காதலர் என்பது தெரிய வந்துள்ளது.

ராம்போ எனப்படும் விஜய் சேதுபதியை பிடித்துப் போகவே அவருக்காக ஸ்ரீசாந்தை கழற்றிவிட்டுவிடுவாராம் சமந்தா.

அண்மையில் வெளியான பாடலில் கதீஜா மற்றும் ராம்போவின் காதல் கதையை சொல்லியிருந்தார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமத்திருக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் சேர்ந்து தன் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். நயன்தாராவும், சமந்தாவும் சேர்ந்து நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதனாலேயே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் நானும் ரௌடி தான் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஓகே மட்டும் சொல்லிடாதீங்க, சோழி முடிஞ்சுடும்: பதறும் தனுஷ் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.