நீடித்த, நிலையான, சமமான வளர்ச்சியை எட்டுவதே திராவிட மாடல் வளர்ச்சி.. கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேச்சு

சாதி, மத பேதங்களைக் கடந்து அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் பெரியார் சமத்துவபுரம் திட்டம் என்றும் நீடித்த, நிலையான, சமமான வளர்ச்சியை எட்டுவதே திராவிட மாடல் வளர்ச்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ஊராட்சிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் செயல்படுத்தப்படும் என்றும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தாலும், தமது அரசு பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் கூறினார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.