காவல்நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கள்ளகாதலர்கள்.. திருப்பூரில் நடந்த சோகம்..!

திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஸ். இவருக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி11 மாத கைக்குழந்தை உள்ளது.  இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதே பகுதியில் சின்னப்பையன் என்பவர் வேலை செய்து வந்தார்.

சின்னப்பையனும் சதீஸூம் நட்பாக பழகி வந்தனர். அப்போது, சின்னப்பையனுக்கும் சங்கீதாவிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறவே கடந்த மாதம் 3 தேதி சின்னப்பையனுடன் சங்கீதா ஊரைவிட்டு சென்றுவிட்டார்.

இதனை அறிந்து அதிர்ச்சியளித்த சதீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சின்னபையன் மற்றும் சங்கீதா இருவரையும் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு வந்த சின்னபையன் மற்றும் சங்கீதா காவல்நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர்கள் விஷமருந்தியது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.