காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தின் செயன் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதி, லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹைதர் எனவும் அவன் காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு தீவிரவாதி உள்ளூர்வாசி எனவும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களை கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ள போலீசார், அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடருவதாக கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.