சர்ச்சையில் சிக்கியுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி!!

பட்டியலின மக்கள் குறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில்  நடைபெற்றது.

இதில் கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர், செருப்பைத் தலையில்  தூக்கிக் கொண்டு இருந்த  சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து  திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார்.

dindigul-leoni1

பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமைவாங்கித் தந்தது நீதிக் கட்சிஎன்றும் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் கூறினார்.

 அதே போல் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும், பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டுபவரே  பிரதமர் ஆவார் என்பதற்கு டெல்லியில் அறிவாலயத்தை நிறுவியதே ஒரு  எடுத்துக்காட்டு  என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பட்டியலின மக்கள் குறித்து திண்டுக்கல் லியோனி பேசியது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.