காஷ்மீர் பண்டிட்கள் ஸ்ரீநகரில் பேரணி| Dinamalar

ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று காஷ்மீர் பண்டிட்கள் பேரணி நடத்தினர்.ஜம்மு – காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்துக்குள், 12ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள், அங்கு பணியில் இருந்த ராகுல் பட் என்பவரை சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் நேற்று திரண்ட காஷ்மீர் பண்டிட்கள், ராகுல் பட் கொல்லப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காஷ்மீர் பண்டிட்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இந்தப் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.