லாரியில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. 7 பேரிடம் விசாரணை!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே லாரியில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாடி கெஞ்சனகெரே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் செம்மரக்கட்டைகள் பதுக்கப்பட்டிருந்ததை அடுத்து அந்த லாரியையும், அதற்கு பாதுகாப்பாக வந்த தமிழக பதிவெண் கொண்ட லாரியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.