தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் தீவிபத்து.. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைப்பு..!

தனியார் காப்பீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் அண்ணாசாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்தின் எதிரே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில், தரைதளத்தில் ஜவுளிகடையும் 2-ம் தளத்தில் கல்வி நிறுவனமும், மூன்றாம் தளத்தில் 2 தனியார் காப்பீட்டு நிறுவனமும் செயல்ப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் திடீரென காப்பீட்டு அலுவலகத்தில் கரும்புகை ஏற்பட்டது. அக்கம்பக்கதினர் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புதுறைக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

தீயின் வெப்பம் தாளாமல் அங்கிருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறின. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.