முன்னாள் காதலனுடன் பழகிய பெண் மீது ஆசிட் வீச்சு..!

சென்னையை அடுத்த மதுரவாயலில் முன்னாள் காதலனுடன் பழகியதாக பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரவாயலைச் சேர்ந்த லேகா மீது பெண் ஒருவர் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை திடீரென ஊற்றி உள்ளார். இதில் லேகாவுக்கும் அவரது அம்மாவுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போரூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் தீனதயாளன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், காதல் பிரச்னையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.