மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி இலங்கை படை முகாமுக்கு விஜயம்

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கொர்னெலிஸ் ஜோஹன்னஸ் மத்திஜ்சன் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை அமைதிகாக்கும் படை முகாமுக்கு அண்மையில் விஜயம் செய்தார்.

இலங்கை அமைதிகாக்கும் படை யின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் தினேஷ் புலத்சிங்கள வருகை தந்த ஐ.நா அமைதிகாக்கும் படை உயரதிகாரியை வரவேற்றதுடன், இலங்கை படையணியின் பணிகள் குறித்தும் அவருக்கு விளக்கமளித்தார் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விஜயத்தின் போது லெப்டினன்ட் ஜெனரல் மத்திஜ்சன் இலங்கை படையினருடன் உரையாடியதுடன் அவர்களின் சேவையையும் பாராட்டினார்.

பாதுகாப்பு அமைச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.