அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது .

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் ,வாஷிங்க்டன் பகுதிகளில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று துப்பாக்கி வன்முறைக்கு எதிராக கோஷமிட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.