இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – தினசரி பாதிப்பு உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 8,582 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 8,582 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

நேற்று முன்தினம் 7,584 நேற்று 8,329 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,582 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,13,435 லிருந்து 4,32,22,017 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 4,435 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 4,26,48,308 லிருந்து 4,26,52,753 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,370 லிருந்து 44,513 ஆக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,24,761 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 13,04,427 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 195.07 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.