திமுக அரசை கலைக்க சதி! பாஜக மீது அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு குற்றச்சாட்டு

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் ஜாதி கலவரத்தை உருவாக்கி, திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி, கலைக்க பாஜக முயற்சி மேற்கொள்வ தாக செங்கல்பட்டில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

செங்கல்பட்டில், நகர திமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் சாதி சண்டை, மதக்கலவரங்களை உண்டு பண்ணி சட்டம் ஒழுங்கை சீரழித்து, இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டு பண்ணி  ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டியவர், அதற்கேற்றால்போல, தமிழகத்தில் ஏற்படும் சிறு பிரச்சனையை கூட பாஜக பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே கொரோனா காலத்தின்போது,  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பேசியபோது, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், ஆட்சியை எப்படி நடத்துவது, அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இருந்த காலத்தில், திறம்பட செயல்பட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டியவர், தற்போது கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று சொல்கிறார் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,  பாஜகவால் நம்மை ஒன்றும் வென்றுவிட முடியாது எனவும், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.