அடுத்த வாரம் முதல் ,கொழும்பு மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி

நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ‘PMB அரிசி’யை (PMB Rice)  அடுத்த வாரம் கொழும்பு மக்களுக்கு விற்பனை செய்ய ,விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 இந்த அரிசி 5 மற்றும் 10 கிலோவாக பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் பல இடங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் 200,000 அரிசி பொதிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.