பெண்கள் இந்த தடை அணிய தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரான்சின் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்தும் பெண்கள் ‘பிகினி’ உடையை அணிய வேண்டுமென்ற நிபந்தனை உள்ளது. இதுவே, இஸ்லாமிய பெண்கள் பயன்படுத்த புர்கினி என்ற உடை இதுநாள்வரை அனுமதிக்கப்பட்டிருந்தது.

பர்தா மற்றும் பிகினி என்ற வார்த்தைகளின் கூட்டு கலவையாக கருதப்படும் புர்கினி உடை, உடல் முழுவதையும் மூடி முகம் மட்டும் தெரியும் வகையிலான உடையாகும். பொது இடங்களில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த உடை இருப்பதாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக கிரினொபெலில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் புர்கினி அணிந்து குளிக்க தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகர் – இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

இந்த உத்தரவை எதிர்த்து பிரான்ஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அதில், ‘நாடு முழுவதும் பொது நீச்சல் குளங்களில் புர்கினி அணிய தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கிரினொபெலில் நீதிமன்றம் விதித்த தடையும் செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.