காவலராக இருந்த போது கொலை செய்ய உதவியதற்காக 101 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..

ஜெர்மனியில் நாஜி வதை முகாமில் காவலராக இருந்த போது கொலை செய்ய உதவியதற்காக 101 வயதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது 1942 முதல் 1945 ஆண்டு வரை நாஜிக்களின் சக்சென்ஹவுசன் வதை முகாமில் ஜோசப் ஷூட்ஸ் (Josef Schuetz) என்பவர் காவலராக பணியாற்றியபோது 3,518 கொலைகளுக்கு துணைபோன குற்றத்திற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வதை முகாமில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.