விம்பிள்டன் டென்னிஸ்: நடால், கிர்கியோஸ் அரையிறுதிக்கு தகுதி..!

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார்.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் மற்றும் 3வது செட்டை டெய்லரும், 2வது மற்றும் 4வது செட்டை நடாலும் கைப்பற்றினர். இந்த நிலையில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை நடால் வென்றார். இறுதியில் 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 (10-4) என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், சிலியின் கிறிஸ்டியன் காரினுடன் மோதினார். இந்த போட்டியில் காரினை 6-4, 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி கிர்கியோஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் கிர்கியோஸ் முன்னணி வீரரான ரபேல் நடாலுடன் மோத உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.