கோவிலில் தாக்குதல்; வங்கதேசத்தில் கலவரம்| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் சமூக வலைதளத்தில் வெளியான பதிவால் ஆத்திரம் அடைந்த சில முஸ்லிம் இளைஞர்கள், வீடுகள் மற்றும் ஹிந்து கோவிலில் தாக்குதல் நடத்தினர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நரைல் மாவட்டம் சஹபரா என்ற கிராமத்தில் வசித்த ஒரு இளைஞர், சமூக வலைதளத்தில் மத உணர்வை துாண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டார்.

இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், அந்தக் கிராமத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஹிந்து கோவிலுக்குள்ளும் புகுந்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறைக் கும்பலை கலைத்தனர். அங்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் தலைமறைவாகி விட்டதால், அவரது தந்தையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.