குரங்கு அம்மை வைரஸ் தொற்று என்பதால் நாட்டிற்குள் நுழைவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.
புதுடெல்லியைச் சேர்ந்த 31 வயதான ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கடந்த 24ம் திகதி கண்டறியப்பட்டதை அடுத்து வைத்தியர் ஜீவந்தராவை ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டபோது கேட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர்,
குரங்கு அம்மை வைரஸ் தொற்று என்பதால் இந்நோய் நாட்டிற்குள் நுழைவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவித்தார்.
“இதன் காரணமாகவே உலக சுகாதார அமைப்பு (WHO) பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு தொற்றுநோய் அல்ல, நோயின் அறிகுறிகளை மறைப்பது கடினமாகும். எனவே, வெளிநாட்டில் இருந்து வரும் நோயாளியை கண்காணிப்பது கடினமாக இருக்காது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது கோவிட்-19 போன்றது அல்ல. மேலும் இது கோவிட்-19 போல வேகமாக பரவாது.
குரங்கு அம்மை பாலியல் ரீதியாக பரவும் நோயல்ல
மேலும் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், நோய் பரவுவதைத் தடுக்க அந்த நபர் தனிமைப்படுத்தப்படலாம்.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல், நிணநீர் முனைகள் பெரிதாகி, சில சமயங்களில் வலி ஏற்படக்கூடிய சொறி இருக்கும் என்றும் அவர் கூறினார்.
1970களில் இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுடன் நேரடித் தொடர்பு இல்லாத நிலையில், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பகுதிகளில் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது பாலியல் ரீதியாக பரவும் நோயாக இல்லாவிட்டாலும், ஓரினச்சேர்க்கையாளர்களிடையே இது அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நோயாளி பாதிக்கப்படும் விகாரத்தைப் பொறுத்து வைரஸின் இறப்பு விகிதம் ஒன்று முதல் பத்து சதவீதம் வரை இருக்கும் என்று வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.