ஹைதியில் 17 பேர் பலி| Dinamalar

பஹாமாஸ் : வட அமெரிக்காவில், கரீபிய தீவு நாடான ஹைதியிலிருந்து மியாமிக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர்.

ஹைதியில் பொருளாதாரம் சீர்குலைந்ததால், அடிப்படை தேவையான நீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அருகில் உள்ள நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதியிலிருந்து பஹாமாஸ் வழியாக, 60க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி, நேற்று முன்தினம் பயணித்தது. அப்போது, கடலில் வீசிய பலத்த காற்று மற்றும் கடும் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில், 17 பேர் உயிரிழந்தனர்; 25 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.