ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழப்பு..

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்குள்ள நியூ சிட்டி ஹவுஸ் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.