க்யூட் நுழைவுத் தேர்வு: 4ம் கட்டத்திலும் கோளாறு| Dinamalar

புதுடில்லி : மத்தியப் பல்கலையில் சேருவதற்காக நேற்று நடத்தப்பட்ட நான்காம் கட்ட ‘க்யூட்’ நுழைவுத் தேர்விலும் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நாடு முழுதும் உள்ள மத்தியப் பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் சேர க்யூட் நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் துவங்கி ஆக.,28 வரை பல்வேறு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஜூலையில் நடந்த முதற்கட்ட தேர்விலேயே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு பல மையங்களில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
அதேபோல் நேற்று நடந்த நான்காம் கட்ட தேர்விலும் நாடு முழுதும் பல மையங்களில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சில மையங்களில் இரண்டு மணி நேரம் தாமதமாக தேர்வு துவங்கியது. பல மையங்களில் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.