பயங்கரவாத தடுப்பு சட்டம் – இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் தடை!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டி இம்ரான் கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், போலீசாரால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் குற்றஞ்சட்டினார்.

மேலும், தனது கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட பெண் நீதிபதி ஆகியோரை மிரட்டும் வகையில் பேசினார். அவரது உரை, நாடு முழுவதும் செய்தி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், இம்ரான் கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் நேரலையில் ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்தது.

சரமாரி குத்து… பதறவைத்த அர்கான்சாஸ் போலீஸ்… கதிகலங்கிய அமெரிக்கா- வைரல் வீடியோ!

இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள், நீதிபதி உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்ரான் கானுக்கு வரும் 25 ஆம் தேதி வரை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே, முன்ஜாமின் முடிந்த பிறகு அதாவது, 25 ஆம் தேதிக்கு பிறகு இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.