ஓ.பன்னீர்செல்வம் கையில் அதிமுக – எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பக்கம் தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அண்மையில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்,

இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கட்சி நலன் கருதி, மீண்டும் இணைந்து செயல்பட, எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை, வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு தான் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்றும் அவரது ஆதரவாளர்கள் ஆரூடம் தெரிவித்து வந்தனர். ஆனால், பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த நிர்வாகிகள், ஓ.பன்னீர்செலவம் பக்கம் படையெடுத்து வருகின்றனர். ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, அதிமுக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது, எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் நான்கு பேர், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து, ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தாவ இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் எந்த நேரத்திலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது. மேலும் பல நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் குறித்து அறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.