என் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தார்! சுவிஸில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணின் புகார் குறித்து பிரசாந்த் விளக்கம்


சுவிஸில் வசிக்கும் இலங்கை தமிழ்ப்பெண் கொடுத்த புகார் தொடர்பில் நடிகர் பிரசாந்த் விளக்கம்.

இரு தரப்பு புகார் குறித்தும் காவல்துறை விசாரணை

நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பண மோசடி புகார் கொடுத்துள்ள நிலையில் பிரசாந்த் தரப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை­யைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலைய ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர், நடிகர் பிரசாந்த் தன்னிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளதாக வாய்மொழி புகார் ஒன்றை சென்னை காவல் துறையில் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் தரப்பும் அந்தப் பெண் மீது புகார் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இரு புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.

இது தொடர்பில் பிரசாந்த் தரப்பு விரிவாக விளக்கம் அளித்துள்ளது.
பிரசாந்த் தந்தையான தியாகராஜனின் உதவியாளர் ஆனந்த் புகார் மனு ஒன்றை சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

என் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தார்! சுவிஸில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணின் புகார் குறித்து பிரசாந்த் விளக்கம் | Money Fraud Complaint Prasanth Swiss Tamil Women

அதன் முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், குமுதினி சில முறை எங்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்துள்ளார்.
சில ஆண்டுகளாக என் (பிரசாந்த்) புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்படுகிறார்.

எனவே குமுதினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் குமுதினி அளித்த புகார் தொடர்பாக எந்தவிதமான ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை என காவல் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.