நெல்லூரில் வீடு புகுந்து பாலியல் சீண்டல் சிறுமியின் கழுத்தறுத்து வாயில் ஆசிட் ஊற்றி கொல்ல முயற்சி

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் புஜபுஜ  நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் மாமாவான நாகராஜ் வீட்டிற்கு வந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று கதவை மூட முயன்றுள்ளார். அப்போது, சிறுமியின் கழுத்தை காய் வெட்டும் கத்தியை கொண்டு அறுத்து வாயில் ஆசிட் ஊற்றியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பெற்றோரை வரவழைத்து அவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நெல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.