உணவகங்களில் வாழை இலை பயன்படுத்த கோரிக்கை

பழநி: பழநி செம்மொழி தமிழ்ச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பழநி கோயிலின் சார்பில் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். பழநி பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் வழிகளை வழித்தடத்திற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். பழநி பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

பழநி நகரில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கவும், பார்சல் கட்டுவதற்கும் வாழை இலைகளை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். பழநி வழித்தடத்தில் ராமேஷ்வரம், கன்னியாகுமரி, குருவாயூர், கொச்சின், திருப்பதி  ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். ரேஷன் பொருட்களை ஒரே தவணையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.