“நாங்கள் இதை குடிச்சிட்டு சாகணுமா”.. மது பாட்டிலில் மிதந்த பொருளால் கொந்தளித்த குடிமகன்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் “குவாட்டர் பாட்டிலில் தூசியா? தீப்பற்றி எரியும் பார்” என ஆவேசமாக வாலிபர் போதையில் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் குடிப்பதற்காக மது வாங்கியுள்ளனர். இரண்டு குவாட்டர் பாட்டில்களை அவர்கள் வாங்கிய நிலையில் அதில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்குள் பெரிய அளவிலான துகள் ஒன்று மிதந்ததாக கூறப்படுகிறது.
image
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர்கள் அந்த பாட்டிலை மதுபான கடையில் திரும்ப கொடுத்த போது ஊழியர்கள் அதை பெற்றுக்கொண்டு மாற்று மது பாட்டிலை தர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்களில் ஒருவர் அந்த குவாட்டர் பாட்டிலை மிதக்கும் துகளோடு வீடியோ எடுத்துள்ளார்.
image
அதோடு நிற்காமல் “135 ரூபாய் கொடுத்து ஒரு குவாட்டர் வாங்கினால் அதில் என்னென்னவோ கிடக்கிறது. இதை குடித்து கொண்டு சாக வேண்டுமா” என கேள்வி எழுப்பி, “இதேப்போல் பாட்டில்கள் வந்தால் தீப்பற்றி எரியும் பார்!” என ஆவேசமாக பேசி வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவேற்றிய நிலையில் அது தற்போது வேகமாக பரவி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.