தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் அழகான மொழி, ஆனால்…- நடைபயணத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன..?

இந்திய

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கிய , ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் துவங்கியது. ராகுல் காந்தியின் நடை பயணத்தில் அவருடன் பல்வேறு அரசியல் தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நடை பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி “இந்தியாவின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன் . நடைபயணம் குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வரவேற்கிறேன் நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாஜக அரசு” என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

மேலும் பேசிய அவர் “வருமானவரி, அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுகிறது பாஜக அரசு. நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் அழகான மொழி, ஆனால் கற்றுக்கொள்வதற்கு கடினம் என நினைக்கிறேன்”

“நான் காங்கிரஸ் தலைவராக வரலாமா வேண்டாமா என்பது தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் போது தெளிவாகத் தெரியும்; நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக முடிவு செய்துவிட்டேன், என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை”.

இவ்வாறு கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது தேசிய ஒற்றுமை பயணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.