2 ஆவது மகாராணியின் மறைவின் காரணமாக அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் வெளியிடப்படும் நாணய தாள்கள் மற்றும் நாணய குற்றிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மகாராணியின் உருவப்படத்தை நீக்கி புதிய மன்னராக நியமிக்கப்படவுள்ள நார்ல்ஸ் மன்னரின் உருவப்படம் உள்ளவாங்கப்படவுள்ளன.
இன்றைய தினத்திற்கு பின்னர் அச்சிடப்படும் நாணய தாள்களுக்கு இது செல்லுபடியாகும். பல நாடுகளில் மற்றும் பல இடங்களில் கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2வது எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கூட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆகக் குறைந்தது 15 நாட்களுக்கு பாராளுமன்ற அலுவல்களை இடைநிறுத்துவதற்கு பிரதமர் என்தனி எல்பெனீஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.