கனடாவில் ஹிந்து கோயில் உடைத்து சேதம்நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

டோரன்டோ:’கனடாவில், பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோயிலை சேதப்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதிய காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது.கனடா எம்.பி.,யும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சந்திரா ஆர்யா, ‘சுவாமி நாராயண் கோவில் மீதான காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நாசகாரச் செயலை, அனைவரும் கண்டிக்க வேண்டும். இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மாதிரியான மத துவேசத்தால், கனடாவிலுள்ள ஹிந்துக்கள் கவலையடைந்துள்ளனர்’ என, பதிவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.