டோரன்டோ:’கனடாவில், பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோயிலை சேதப்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதிய காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளது.கனடா எம்.பி.,யும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சந்திரா ஆர்யா, ‘சுவாமி நாராயண் கோவில் மீதான காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நாசகாரச் செயலை, அனைவரும் கண்டிக்க வேண்டும். இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மாதிரியான மத துவேசத்தால், கனடாவிலுள்ள ஹிந்துக்கள் கவலையடைந்துள்ளனர்’ என, பதிவிட்டுள்ளார்.
டோரன்டோ:’கனடாவில், பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோயிலை சேதப்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதிய காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்