மும்பையில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது? சர்ச்சையில் சிக்கிய சிபிஎஸ்இ வினாத்தாள்…

சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பருவதேர்வு நடைபெற்று வரும் நிலையில், 6ம் வகுப்பு கேள்வித்தாளில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சி.பி.எஸ்.இ.  6-ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பருவத்தேர்வு கேள்வித் தாளில் தீண்டாமை குறித்து கேள்வி இடம் பெற்றுள்ளது மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாத சாதியாக இருந்தது என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.  இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 6-ம் வகுப்பிற்கான தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பாடப் புத்தகத்தின் (சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை பாடப்பிரிவு) 19-வது பக்கத்தில், பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை குறித்த பாடத்தில் இருந்து எழுப்பப்பட்ட கேள்வி எனவும், தாங்களாக இந்தக் கேள்வியை தேர்வு செய்யவில்லை எனவும், இருப்பினும் இதுபோன்ற தவறு இனிவரும் நாட்களில் நடைபெறாது எனவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.