உ.பி.யில் கனமழை 10 பேர் உயிரிழப்பு

இட்டாவா: உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சந்திரபுரா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிறுவர்களின் பாட்டி சாந்தினி தேவி (70) மற்றும் 5 வயது குழந்தையும் காயமடைந்தனர். இதேபோல், கிரிபால்புர் கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த குடிசை மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ராம் சனேகி (65) அவரது மனைவி ரேஷ்மா (62) ஆகியோர் உயிரிழந்தனர். இதுபோல், மாநிலத்தின் பல இடங்களில் நடந்த மழை தொடர்பான விபத்துகளில் 10 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.