புதுடில்லி :பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ, ‘டுவிட்டர்’ கணக்கு நம் நாட்டில் அதிரடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்ட விதிகளுக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் எதிரான விஷயங்களை தெரிவிக்கும் சமூக வலைதள கணக்குகளை முடக்கி வைக்கும்படி, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதன்படி, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்ட சமூக வலைதள கணக்குகள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு நேற்று இந்தியாவில் முடக்கி வைக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாக்., அரசின் டுவிட்டர் கணக்கு முடக்கி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஜூனிலும் அந்த கணக்கு நம் நாட்டில் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
புதுடில்லி :பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ, ‘டுவிட்டர்’ கணக்கு நம் நாட்டில் அதிரடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்ட விதிகளுக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்