புதுடில்லி :டில்லியில், நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ௧௦ வயது சிறுவனை பாலியல் ரீதியாக கடுமையாக சித்ரவதை செய்ததை அடுத்து, அச்சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தான்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ௧௦ வயது சிறுவன், அங்குள்ள அரசு பள்ளியில் ௫ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம், இச்சிறுவனின் நண்பர்கள் மூன்று பேர், இவனை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுவன் மறுத்ததால், அவனை செங்கல், இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அந்தரங்க உறுப்பில் கம்பியை செருகியுள்ளனர்.இதில், அச்சிறுவன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் சமீபத்தில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் ‘நண்பர்கள் இருவர் மற்றும் ஒரு உறவினர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, சிறுவனை பாலியல் சித்ரவதை செய்து தாக்கிஉள்ளனர்.
‘இதனால், சிறுவன் பலத்த காயமடைந்தான்’ என சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மூன்று சிறுவர்கள் மீது போலீசார், ‘போக்சோ’ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement