ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் விவகாரத்து முடிவா? வதந்திகளுக்கு அவர்களின் பதில் இதுதான்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் 6 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் தங்களது கரியரில் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றனர். இதனால் அடிக்கடி தீபிகா படுகோனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் படப்பிடிப்பிலிருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் மும்பை வீட்டிலிருந்த போது இரவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கணவர் ரன்வீர் சிங் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்குச் சர்ச்சையான முறையில் போட்டோஷூட்கள் கொடுத்தது பெரிய விவாதமானது. அவர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தீபிகா படுகோனும், அவரது கணவருக்கும் இடையே திருமண உறவு ஆரோக்கியமானதாக இல்லை என்றும், இருவரும் விரைவில் பிரியப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

சர்ச்சைக்குறிய டிவிட்டர் செய்தி

இது தொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்று வைரலாகப் பரவியது. இதனால் இச்செய்தி உண்மையா பொய்யா என்று தெரியாமல் இருவரது ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்தனர். தற்போது இந்த வதந்திக்கு இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ரன்வீர் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் முழுக்க முழுக்க பிங்க் கலர் ஆடையுடன் இருப்பது போன்ற புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ரசிகர்கள் அனைவரும் அந்த உடை குறித்து கருத்து தெரிவித்தனர். அவர்களோடு சேர்ந்து நடிகை தீபிகா படுகோனேயும் தனது கணவரின் படத்திற்குப் பதில் கொடுத்துள்ளார். ‘சாப்பிடக்கூடியது (Edible)’ என்று ஒற்றை வார்த்தையில் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரன்வீர் சிங்கும் தனது மனைவியின் கமென்ட்டுக்கு முத்தம் மற்றும் சில எமோஜிக்களை ரிப்ளையாகப் போட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவே தெரிகிறது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

அவர்களுடன் சேர்ந்து திருமணம் செய்து கொண்ட பாலிவுட் ஜோடிகள் குழந்தை பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டனர். ஆனால் தீபிகாவும், அவரது கணவரும் தங்களது வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதை அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று பார்க்காமல், இந்த ஒரு விஷயத்தை வைத்துத்தான் விவாகரத்து என்ற வதந்தி கிளம்பியிருப்பதாகத் தெரிகிறது.

ரன்வீர் சிங் சமீபத்தில் தனது மனைவி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “நாங்கள் 2012ல் சந்தித்து டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். அதிலிருந்து தற்போது 10 ஆண்டுகள் ஆகின்றன. நான் அவர் மீது மரியாதையைத் தவிர வேறு எதையும் வைத்திருக்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவரிடமிருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டேன். அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. இருவரையும் விரைவில் ஒன்றாகச் சந்திப்பீர்கள். எனக்கு நடந்தவற்றில் அவர் எனக்குக் கிடைத்தது மிகச்சிறந்த ஒன்றாகும். என் வாழ்க்கையில் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.