பெரம்பலூர்: இடி, மின்னல் தாக்கியதில் மாடு உடன் சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்த விவசாயி

பெரம்பலூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இன்றும் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், வேப்பூர் அடுத்த வசிஸ்டபுரம் பகுதியிலும் லேசான மழைபெய்தது. அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த துளசிநாதன் (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
image
இதில், ஒரு பசுமாடும் உயிரிழந்தது. இதையறிந்த உறவினர்கள் துளசிநாதன் சடலத்தை பார்த்து கதறி அழுந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த குன்னம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வசிஸ்டபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.