இந்திய மகளிர் அணி 7ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இந்திய மகளிர் அணி 7ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
வங்கதேசத்தில் 2022 ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்கியது.
நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரைஇறுதியில் தோற்றன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதியது.
இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி, தோல்வியடைந்து இரண்டாம் இடத்திற்கு தெரிவானது.
பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் இனேக்கா ரணவீர ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களை பெற்றார்.
66 ஓட்டங்களை வெற்றியிலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 8.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் ஸ்மிர்த்தி மந்தனா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
,