தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்யா போர்: உக்ரைனிலுள்ள இந்தியர்கள் உடனே வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றஞ்சாட்டிய ரஷ்யா அந்நாட்டின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும், மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனில் இருந்து வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.