அரச சேவையிலிருந்து ஓய்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் இயங்கிவரும் பதிவாளர் நாயக கிழக்கு வலய அலுவலத்தின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி.ரஞ்சினி சுந்தரலிங்கம் நேற்று (26) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

1991 ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி அரச சேவையில் இணைந்த இவர், கொழும்பு பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் கடமையாற்றினார். 1991 ஏப்ரல் 1 ஆம் திகதி மட்டக்களப்பு காணி பதிவகத்திற்கு இடமாற்றம் பெற்று பின்னர் 2006 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் பதிவாளர் நாயக திணைக்கள கிழக்கு வலய அலுவலகத்தில் கடமையாற்றி நேற்றைய தினம் 32 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

ஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் , மட் /வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் பழையமாணவியும் ஆவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.