ஆயுதம் ஏந்திய ஆறு பேர் விவசாயி வீட்டில் கொள்ளை| Dinamalar

நாசிக்,:மஹாராஷ்டிராவில் ஆயுதம் ஏந்திய ஆறு மர்ம நபர்கள், விவசாயி ஒருவர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் வீட்டில், அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் நேற்று நள்ளிரவில் நுழைந்தனர். அவரது குடும்பத்தினரிடம் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, 280 கிராம் தங்கம், 480 கிராம் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 8.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக திண்டோரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.